அபராதத்தை ரத்து செய்ய கோரி மேல் முறையீடு செய்த டிரம்ப்
அமெரிக்கா: முறையீடு செய்தார்… சொத்து மதிப்பை அதிகரித்துக்காட்டி நிதி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 464 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேல் முறையீடு செய்துள்ளார். நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி நடந்துகொண்டதாகவும், உண்மைக்கு மாறாகச் செயல்பட்டதாக தனது மேல் முறையீட்டு மனுவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.