மக்கள் குற்றச்சாட்டு… அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வேலூர் எம்பி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து நிழற்கூட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த வேலூர் எம்பி கதிர் ஆனந்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் தங்களது பகுதியில் பேருந்து நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் பட்டா நிலத்தை கேட்பதாக குற்றஞ்சாட்டினர். இதனை தொடர்ந்து உடனடியாக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் அதிகாரிகளை அழைத்து பட்டாநிலத்தில் ஒரு செங்கல்லை கூட எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.