நாங்கள் தலையிட முடியாது… உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது
புதுடில்லி: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் நாங்கள் எந்த விதத்திலும் தலையிட முடியாது. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏப்ரல் 15ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, மனுதாரர்களின் கோரிக்கைகளை அங்கு முன்வைத்து நிவாரணம் கேட்கலாம்” என கூறி, தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அனைத்து கோரிக்கைகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டனர்.