கர்நாடக அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்
சென்னை: உச்சநீதிமன்றத்தை நாடுவோம்… நீர் தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். என்றாவது, ஒருநாளாவது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கர்நாடகா கூறியுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய அவர், அதிகம் இருந்தாலும் குறைவாக இருந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்று கர்நாடகா கூறும் என்று தெரிவித்துள்ளார்.