மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் அலுவலர் கருத்து என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் கையில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பு என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து, சென்னை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்” என தெளிவுப்படுத்தினார்.