வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகருக்கு காப்பு
கோவை: கோவை பூலுவப்பட்டியில் தேநீர் கடையில் வைத்து வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பணம் பிரித்து கொடுத்த பாஜக பிரமுகர் ஜோதிமணி என்பவர் இன்று (18ம் தேதி) கைது செய்யப்பட்டார். வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஜோதிமணியிடம் இருந்து ரூ.81,000 பணம், பூத் ஸ்லிப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.