தேர்தல் என்பதால் நாளை படகு சவாரி கட்: வந்து ஏமாறாதீங்க!!!
சென்னை: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நாளை (19ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட 12 சுற்றுலா தளங்களில் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையிட அனுமதி வழங்கப்படும் என வனத்துறை தகவல் அளித்துள்ளது. பேரிஜம் ஏரியில் படகு சேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.