தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் வீராலிமலை சட்டமன்ற உறுப்பினரான சி. விஜயபாஸ்கர், வரும் ஜூன் 29-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் நடைபெறவுள்ளதாகவும், அதில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் நேரில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், அதிமுக உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த சி. விஜயபாஸ்கர், அதன் பின்னர் தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, தவெக உயர்மட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்புகள் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தன.