சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரிஹரன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட இருந்த வெடிமருந்துகளை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மற்ற குற்றவாளிகளுக்கு மாற்றிய வழக்கில் 17-வது குற்றவாளியாக அவரை போலீசார் கைது செய்தனர். கைதான ஹரிஹரன் 112 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் கோரி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹரிஹரன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என ஹரிஹரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.