சென்னை : வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. நீரிழப்பாக ஏற்படும் பல சிக்கல்களை தடுக்கிறது.
காலையில் எழுந்ததுமே, பலருக்கும் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், அது நல்லதல்ல. அதற்கு பதிலாக, முதலில் தண்ணீரை குடித்து நாளை தொடங்க வேண்டும்.
இது ஆரோக்கியத்திற்கு நன்மையை பயக்கும். காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். நீரிழப்பால் ஏற்படும் பல சிக்கல்களைத் தடுக்க இது உதவும். மேலும், செரிமான பிரச்னைகளையும் இது குறைக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உடல் சுறுசுறுப்பாக இயங்க அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து பழகுவது மிகவும் சிறப்பானதாகும்.