சென்னை: வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ள மெட்ரோ ரயில் பணியையொட்டி, பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 7 வழித்தடங்களின் 63 பேருந்துகள் பிப்ரவரி 9-ம் தேதி முதல் ஐசிஎப் பேருந்து நிலையத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்படுகின்றன.
அதன்படி, 20, 27D, 23V பேருந்துகள் ICF பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனிக்குச் சென்று, U- டர்ன் எடுத்து, வில்லிவாக்கம் (கல்பனா) பேருந்து நிலையம் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும். வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்படும் எஸ் 43 மற்றும் 44 பேருந்துகள் வழக்கம் போல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

வில்லிவாக்கம் வரை இயக்கப்படும் பேருந்து வழித்தட எண் 22 கொரட்டூர் வரையிலும், திருவேற்காட்டில் இருந்து வில்லிவாக்கம் வரை இயக்கப்படும் பேருந்து வழித்தட எண் 63 ஐ ஐசிஎப் வரையிலும் நீட்டிக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.