பழனி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுபணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் படிகள், மின்சார இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். வின்ச் ரயில் மூலம் 7 நிமிடங்களிலும், ரோப் கார் மூலம் 3 நிமிடங்களிலும் மலைக் கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் பயணம் செய்ய அதிகளவு பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரோப் கார் பராமரிப்புக்காக மாதம் ஒரு நாளும், வருடத்திற்கு 40 – 50 நாட்களும். அதன்படி, கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், ரோப் காரின் மோட்டார், கியர், ஷாஃப்ட் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன. 44 நாட்கள் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை முதல் பக்தர்களுக்கு ரோப்கார் சேவை தொடங்கியது.
முன்னதாக சிறப்பு பூஜை நடந்தது. இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள் கிட்டம்மாள், சுரேஷ்குமார் உடனிருந்தனர்.