ஊட்டி: ஊட்டியில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் தொட்டபெட்டா மலையில் மேக மூட்டத்துடன் மழை பெய்து குளிர் அதிகமாக உள்ளது. இதையும் மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.
மலை முகடு, மலை, மரங்களுக்கு இடையே தவழும் மேகங்களுக்கு இடையே நின்று புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். அதே சமயம் மேக மூட்டம் அதிகமாக இருந்ததால் டெலஸ்கோப் மூலம் இயற்கை அழகை பார்க்க முடியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.