உப்பள்ளியில் தேசிய இளைஞர் திருவிழா… தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை…
பெங்களூர்,
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய இளைஞர் விழா உப்பள்ளி தார்வாரில் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. பிரதமர் மோடி பங்கேற்று விழாவை துவக்கி வைக்கிறார். இந்த விழாவில் நாட்டின் 28 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
விழாவைத் தொடர்ந்து, நாராயணபுரா அணையின் நவீனமயமாக்கப்பட்ட வலது-இடது கால்வாய்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும் பஞ்சாரா சமூக மாநாடு கலபுராக்கியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம். இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
பிரதமரின் வருகைக்காக உப்பள்ளி தார்வாரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இளைஞர் விழா ஒரு வாரம் நடைபெறவுள்ளது என கூறினார்.