May 7, 2024

மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிக்குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை இன்று ஒருநாள் ஒத்திவைப்பு

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். அதன்பின், சட்டசபை கூட்டம் வரும் 13ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை, சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது. 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2வது நாள் காலை 10 மணிக்கு தொடங்கியது. முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பிரபலங்களின் மறைவு குறித்து சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த வகையில் தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசனகர்த்தா கர்த்தா ஆரூர்தாஸ், அவ்வை நடராஜன், ஓவியரும் எழுத்தாளருமான மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்து வீரர் பீலே, எம்.எல்.ஏ. திரு.ஈவேராவின் மறைவு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. திருமகன் ஈவேராவுக்கு மறைந்த சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!