May 13, 2024

ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்ற விசாரணை… 907 வழக்குகளுக்கு தீர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 907 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கறிஞர்களின் முழு ஒத்துழைப்புடன் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நல்லிணக்க மையத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, ராமநாதபுரத்தில் உள்ள மூன்று அமர்வுகளும், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய 7 அமர்வுகளில் நடைபெற்றநிலையில் 2044 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் 907 வழக்குகளுக்கு சமரசதீர்வு காணப்பட்டது, மேலும், விபத்து தொடர்பான வழக்கில் 20 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில் சமரசம் ஏற்பட்டு 12 லட்சம் வழக்காளருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!