May 5, 2024

அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக காமெடி நடிகர் தாடி பாலாஜி பேட்டி

சென்னை: சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே பரோ உபகார அறக்கட்டளையின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சினிமா நடிகர் மற்றும் சின்னத்திரை புகழ் தாடி பாலாஜி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் நடிகர் தாடி பாலாஜி செய்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, கண்டிப்பாக அரசியலில் ஈடுபடுவேன் என்றும், தனக்கு அங்கீகாரம் தரும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன் என்றும், அதே கட்சியில் புதுமையான முறையில் பணியாற்றுவேன் என்றும் கூறினார்.

போதைப் பொருட்களை பொருத்தவரையில் அதனை உபயோகிப்பவர்கள் நினைத்தால் மட்டுமே முற்றிலும் தடுக்க முடியும் என்றும் கூறினார். தற்போது பன்னிரெண்டாவது முடித்த மாணவ, மாணவியரை அடுத்த கட்டமாக கல்லூரிக்கு அனுப்புவதற்காக பெற்றோர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு கல்லூரிகளாக அலைந்து வருகின்றனர். மாணவர்கள் இதனை கருத்தில் கொண்டு நன்கு படித்து வெற்றி பெற வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!