மணிப்பூர் விவகாரம்.. மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு
புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் துவங்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என, கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில் 8வது நாளாக இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகள் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் பிரச்சனையை மீண்டும் எழுப்பி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒளிப்பதிவு திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
ஆனால் மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.