ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு
சென்னை: ஓய்வூதியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- யுனைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவுத்தளத்தில் இருந்து ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில் புகைப்படம் இல்லை.
இந்நிலையில், அடையாள அட்டையில் அவர்களின் புகைப்படம் மற்றும் மனைவி புகைப்படத்துடன் புதியதாக வழங்க வேண்டும் என ஓய்வூதிய சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓய்வூதியர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்குவதற்கு பொருத்தமான படிவங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.