நீலமேகப்பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா
![](https://vivegamnews.com/wp-content/uploads/2024/05/1-31.png)
தஞ்சாவூர்: தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில், கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட் டன. அப்போது செங்கமலத்தாயார் உடனாய நீலமேகப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.
தொடர்ந்து வியாழக்கிழமை (மே 16) முதல் 22 ஆம் தேதி வரை பெருமாள் தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
பின்னர், 23ம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெற்றது. 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.