மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.25 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகம் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.25 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1232 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 80.19 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.