By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நடுக்கடலில் பயங்கர தீ… பிலிப்பைன்ஸ் படகு விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு
    1 Min Read
    ரஷ்யாவுக்கு பெரும் இழப்பா? 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பலி என மேற்கத்திய உளவுத்துறை தகவல்
    1 Min Read
    பள்ளியில் வாய் தகராறு… கத்திக்குத்தாக மாறிய அதிர்ச்சி சம்பவம்: 2 பேர் படுகாயம்
    1 Min Read
    ரூ.66.91 கோடி போர் விமான கொள்முதல் முறைகேடு? கோத்தபய ராஜபக்சேவிடம் 5 மணி நேர விசாரணை
    1 Min Read
    தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 5 மணி நேர பரோல்… சின்மயி கிருஷ்ண தாஸின் உணர்ச்சிகரமான தருணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உயிருக்கு உலைவைக்கும் நொறுக்குத்தீனிகள்..!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி தரும் பன்னீர்!
    1 Min Read
    கொழுப்பு கட்டிகளை இயற்கை முறையில் கரைக்கும் வழிமுறைகள்
    2 Min Read
    ‘அன்புப் பெரியோர்களே…’ என்ற குரல் ஓய்ந்தது! சாலமன் பாப்பையா மறைவால் தமிழகம் சோகம்
    1 Min Read
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: 6,000 போலீசார் பாதுகாப்பு! கூடுதலாக 1,000 பேருந்துகள் இயக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நீதிபதியை மிரட்டிய வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > நீதிபதியை மிரட்டிய வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை
இந்தியா

நீதிபதியை மிரட்டிய வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை

Nagaraj
Last updated: September 2, 2026 6:10 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற முயன்ற வழக்கு, தொழிலதிபரிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஊழல் வழக்கில் காவலில் இருந்தபோது, சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுகேஷ், முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் தனிச்செயலாளர் என்றும், பின்னர் அந்த நீதிபதியே பேசுவதாகவும் கூறியுள்ளார்.

அப்போது தனக்கு உடனடியாக ஜாமீன் அல்லது இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதியை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து நீதிபதி பூனம் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தை தொடர்புகொண்டு விசாரித்தபோது, அத்தகைய கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் குற்றவாளி என திஸ் ஹசாரி நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து தண்டனை விவரத்தை தலைமை குற்றவியல் நடுவர் ஹர்ஷிதா மிஸ்ரா நேற்று அறிவித்தார்.

அரசு ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்ததற்கும், அரசு ஊழியரை மிரட்டியதற்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், குற்றவியல் மிரட்டலுக்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், கருணை காட்ட வேண்டும் என்றும் சுகேஷ் சந்திரசேகர் முன்வைத்த கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார்.

You Might Also Like

‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை

தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்

மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின

ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

TAGGED:#CourtVerdictcriminalcaseDelhiDelhiCourtSukeshChandrashekharTiharJailகுற்றவியல் வழக்குசுகேஷ்சந்திரசேகர்டெல்லிநீதிமன்றம்திஹார்சிறைநீதிபதிமிரட்டல்நீதிமன்றதீர்ப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?