புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிரட்டலுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என்றும், அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதற்குப் பதிலடி அளிக்கப்படும் என்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“அவர்கள் எங்களை மிரட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதற்கு பதிலடி கொடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
மோடியுடன் முக்கிய ஆலோசனை
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் பெசெஷ்கியானை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல், கடல் வழிப் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
ஹார்முஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெற வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
