By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
    போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
    ரூ.1,322 கோடி கடன் மோசடி புகார்: ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்கு
    1 Min Read
    போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி: இளம்பெண் கைது
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை
    1 Min Read
    உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது சுண்டைக்காய்
    1 Min Read
    வெள்ளித் துகள்கள் கலந்த மண்ணைத் திருட முயற்சி: நீலகிரியில் 5 பேர் கைது
    1 Min Read
    திருப்பதி திருக்குடை பாதயாத்திரை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
    1 Min Read
    கைது நடவடிக்கையில் அரசியலமைப்பு விதிமுறைகள் கட்டாயம்: அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்ட விவகாரம்: விரைவில் விசாரணை நடத்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்ட விவகாரம்: விரைவில் விசாரணை நடத்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அரசியல் செய்திகள்

ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்ட விவகாரம்: விரைவில் விசாரணை நடத்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Nagaraj
Last updated: September 7, 2026 6:26 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ. ஃபாருக் பாஷா தெரிவித்த குதிரைப் பேர குற்றச்சாட்டு தொடர்பாக சட்டசபையில் இன்று பரபரப்பான விவாதம் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு 2 ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ.க்கள் அக்கார்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தன்னையும் மற்றொரு ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ.வையும் சிலர் தொடர்புகொண்டு, பெட்டி பெட்டியாக பணம் கொடுத்து தங்களுக்கு விருப்பமான அமைச்சர் பதவியை வழங்குவதாக கூறி குதிரைப் பேரத்தில் ஈடுபட முயன்றதாக தெரிவித்திருந்தார்.

கொள்கைக்காக அந்த ஆசையை நிராகரித்து அவர்களை விரட்டியடித்ததாகவும் அவர் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் ஷாஜகான் விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய ஐ.யூ.எம்.எல். அமைச்சர் ஷாஜகான், ஃபாருக் பாஷா பேசிய கருத்துகள் திரித்து பேசப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் தேர்தல் முடிவுக்குப் பிறகு மே 8-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் ஐ.யூ.எம்.எல். கட்சியைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தது யார், அவர்களை மிரட்டியது யார், அவர்களுக்கு காவல் போட்டது யார் என்பது குறித்து வெளிப்படையாக கூற வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும், த.வெ.க. ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்ற நோக்கில் எதிர்க்கட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், மே 7-ந்தேதி ஒரு முடிவும், மே 8-ந்தேதி மற்றொரு முடிவும் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் கைப்பாவையாக ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், மாநில சுயாட்சி, சமத்துவம் மற்றும் சமூக நீதியை காக்கும் ஆட்சி அமைந்த காரணத்தினாலும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கியதாக ஷாஜகான் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஐ.யூ.எம்.எல். கட்சியைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களை அக்கார்டு ஓட்டலில் யார் தங்க வைத்தார்கள் என்பது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். அந்த ஓட்டல் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அந்த எம்.எல்.ஏ.க்களை அங்கு தங்க வைத்தவர்கள் யார், அவர்களுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், பொதுமக்களின் பார்வையில் குதிரைப் பேரம் நடத்தியது தி.மு.க.தான் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You Might Also Like

ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: கே.என்.நேரு உள்பட 13 பேருக்கு விரைவில் சம்மன்?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு

தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைகொடுத்து தூக்கிவிட்ட முதல்-அமைச்சர் விஜய்: வீடியோ வைரல்

தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கருக்கு இதய அறுவை சிகிச்சை 

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25.16 ஏக்கரில் 15 அடுக்கு கட்டிடம்

TAGGED:Adhav ArjunaFarooq BashaHorse TradingIUMLShahjahanTamil Nadu Assemblyஆதவ் அர்ஜுனாஐயூஎம்எல்ஃபாருக் பாஷாகுதிரைப் பேரம்சட்டசபை விவாதம்ஷாஜகான்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?