பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 10 பேர் உயிரிழப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆலையின் 3 அறைகள் தரைமட்டமான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.