
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோயில்களில் திருப்பணிகள், கும்பாபிஷேகம் நடத்துதல், குளங்களை சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்தல் போன்ற பணிகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், 1,300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலின் கடைசி கும்பாபிஷேகம் எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில், ரூ.50 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்வரின் உத்தரவுப்படி 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2023-ல் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில், கும்பகோணம் துக்கச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலின் புராதன பாரம்பரியத்தை மீட்டெடுத்து பாதுகாத்ததற்காக 2024-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) தேர்வு செய்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.