
சென்னை: ரயில்வேயில் 2007-ல் முதன்முறையாக தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்று அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்கள் ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. கடந்த 2013-ல் நடந்த தேர்தலில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) வெற்றி பெற்றது. இதன்பிறகு பல்வேறு காரணங்களால் சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறவில்லை. மீண்டும் அங்கீகாரத் தேர்தலை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், டிச., 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தெற்கு ரயில்வேயில், கீழ்க்கண்ட தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன. ஊழியர் சங்கம், மற்றும் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (SRMU). தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டங்களில் உள்ள 140 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் ரயில்வே ஊழியர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் நீங்கலாக 88.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு டிசம்பர் 12-ம் தேதி நடைபெறும். இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
தெற்கு ரயில்வேயில் மொத்தம் 76,653 வாக்காளர்கள் உள்ளனர். இதில், தபால் ஓட்டுகள் நீங்கலாக, 68,153 பேர் வாக்களித்துள்ளனர். 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். பல இடங்களில் SRMU மற்றும் TREU இடையே கடும் போட்டி நிலவியது. எனினும் விரைவில் முடிவுகள் தெரியவரும் என்றார். இந்தத் தேர்தலில் டிஆர்இயு வெற்றி பெற்று அங்கீகாரம் பெறும் என்றும், எஸ்ஆர்எம்யூ அமோக வெற்றி பெறும் என்றும் தொழிற்சங்கங்கள் கணித்து வருகின்றன.