ஜார்ஜ் டவுன்: கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், அந்த பகுதியில் உள்ள நாடுகள் மற்றும் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள கேமன் தீவுகள் அருகிலுள்ள 129 மைல் தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகி, ரிக்டர் அளவில் 7.6 ஆக மதிப்பிடப்பட்டது. இதன் காரணமாக, சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.

அதே நேரத்தில், கடல் பகுதிகளுக்கு அருகிலுள்ள பியூர்டோ ரிகோ, அமெரிக்க விர்ஜீன் தீவுகள், ஹோண்டுராஸ் மற்றும் சில கரீபியன் நாடுகளுக்கு சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. அதனால், அந்தப் பகுதிகளுக்கு கடலுக்கு அருகிலுள்ள மக்களுக்கு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சுனாமி தகவல் மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கத்தால், அடுத்த 3 மணி நேரத்தில் கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பஹமாஸ், ஹைதி, துர்க்ஸ், கைகோஸ், டாமினிகன் குடியரசு, கொலம்பியா, பனாமா, பியூர்டோ ரிகோ, கோஸ்டா ரிகா, அமெரிக்க விர்ஜீன் தீவு, பிரிட்டன் விர்ஜின் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என கூறப்பட்டுள்ளது.