சென்னை: ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்டத்தில் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி நடைபெறுகிறது. இதுகுறித்து, அக்கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட, ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்க கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்போரூரில் மார்ச் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கும் இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியுடன், கொங்கு மக்கள் முன்னணி, தமிழ்நாடு நாடார் சங்கம், இந்திய தேசிய லீக் கட்சி, புரட்சித் தமிழ்நாடு – பறையர் பேரவை, சிறுபான்மை மக்கள் நலக் கட்சி, தமிழர் சந்திப்பு, தமிழர் தேசம் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.