இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக (ரூ.88 லட்சம் கோடி) உயர்த்துவோம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை திமுக அரசால் எட்ட முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் இந்த பொருளாதார ஆய்வு உள்ளது.
உதாரணத்திற்கு, தமிழகத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்பு 2023-24-ல் ரூ. 28.32 லட்சம் கோடி ஆக இருக்க வேண்டும் என திமுக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், தமிழகம் ரூ. 27.22 லட்சம் கோடி, ஒரு லட்சம் கோடிக்கும் குறைவு. அதாவது, தமிழகத்தின் பொருளாதாரம் 2021-22-ல் 20.71 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. ரூ.6.50 லட்சம் கோடி மட்டுமே வளர்ச்சியடைந்து ரூ. 27.22 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தின் பொருளாதாரம் ஆயிரம் கோடி டாலர் என்ற இலக்கை எட்ட வேண்டுமானால், ஆண்டுக்கு 12 சதவீதத்துக்கு மேல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியம். அதாவது பொருளாதாரத்தை மேலும் அடுத்த 7 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடி பொருளாதாரத்தை உயர்த்துவது சாத்தியமற்றது. மது, கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு தமிழகத்தின் மனித வளத்தை அழிக்கும் தமிழக அரசு, அந்த நிலையை மாற்றி, விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க வேண்டும். இதனை அவர் வலியுறுத்தியுள்ளார்.