இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 67 பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சட்டவிரோத குழுக்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. யுஏபிஏவின் 35-வது பிரிவின் கீழ் அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்ட 45 பயங்கரவாத அமைப்புகளும் பட்டியலில் அடங்கும். மேலும், இவை சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 22 பயங்கரவாத குழுக்கள் UAPA பிரிவு 3(1)ன் கீழ் சட்டவிரோத குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல அமைப்புகள் இந்தியா முழுவதும் பிரிவினைவாத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளன.
இந்த அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவது, உறுப்பினர்களை கைது செய்வது உள்ளிட்ட இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.