மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் மம்முட்டி மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம், கிளிபேச்சு கேட்கவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் படப்பிடிப்பில் இருந்து விலகி இருப்பதாகவும் செய்திகள் பரவின. இது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த செய்தியை மம்முட்டி தரப்பு மறுத்துள்ளது. “அந்தச் செய்தியில் உண்மை இல்லை. ரம்ஜான் நோன்பு காரணமாக மம்முட்டி விடுமுறையில் இருக்கிறார்.
அவர் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. விடுமுறைக்கு பிறகு மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பார்” என்று அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது.