By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துப்பாக்கிசூடு நடத்தி கைதான நபர்… அதிபர் டிரம்ப் புகைப்படம் வெளியிட்டார்
    1 Min Read
    வாஷிங்டன் துப்பாக்கி சூட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம்
    1 Min Read
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பாகற்காயில் குழம்பு செய்முறை
    1 Min Read
    உடலுக்கு இரும்புச்சத்தை அளிக்கும் ஏலக்காய்
    1 Min Read
    ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும் பப்பாளிப் பழம்
    1 Min Read
    பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய்!
    1 Min Read
    உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது இளநீர்- சியா பானம்!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உதவித்தொகை செலுத்துவதில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > உதவித்தொகை செலுத்துவதில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை
இந்தியா

உதவித்தொகை செலுத்துவதில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

admin
Last updated: April 11, 2025 1:59 pm
By admin 2 Min Read
Share
SHARE

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் யூடிசியாகப் பணியாற்றியவர் மக்களிடம் ரூ.65 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது நீண்ட நாட்களுக்குப் பிறகு தெரியவந்துள்ளது. வங்கியில் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல் வங்கியில் செலுத்த வேண்டிய தொகையை, அதாவது, பயனாளிகளிடம், பெண் குழந்தை பிறந்தால் ரூ.20,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 30,000 செலுத்தாமல் பல ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளனர்.

அவர் ஏமாற்றியதற்கு முக்கியக் காரணம், அந்தத் துறையில் ஒவ்வொரு மாதமும் அனைத்துத் திட்டங்களுக்கும் வழங்கப்படும் நிதியுதவியை தணிக்கை செய்யாமல் இருப்பதுதான். இந்தக் குற்றத்தை ஒரு தனி மனிதனால் செய்ய முடியாது. LTC, UTC, Assistant, Superintendent, AT, TD, Director மற்றும் Cashier உட்பட யாராவது இந்தக் குற்றத்தை ஆதரிக்காமல் இருந்திருந்தால், இதைத் தடுத்திருக்கலாம். ஆனால், இந்த மோசடியைத் தடுக்கத் தவறிய இத்தனை பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்பதை உணராமல் அந்தத் தனி நபர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து மோசடியை மூடி மறைக்க அரசு முயல்கிறது.

புதுச்சேரி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, மீனவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கான ரொக்கம் வங்கிகள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், மழைக்கால நிவாரண உதவிகள், புயல் நிவாரண உதவிகள் என பல்வேறு நிவாரண உதவிகள் அவ்வப்போது அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் 90 சதவீதத்திற்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் பொருட்களுக்கு பதிலாக வங்கிகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மக்களுக்கு வங்கிகள் மூலம் பணம் கொடுப்பதில் ஒரு சில அதிகாரிகளால் பல்வேறு முறைகேடுகள், ஊழல், மோசடிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள அப்பாவி மக்கள் இதில் ஏமாந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களுக்காக பல்வேறு துறைகள் வங்கிகள் மூலம் செலுத்திய டெபாசிட் மற்றும் மானியங்களில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த விதிமீறலை தடுத்து நிறுத்தவும், குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் விரிவான சிபிஐ விசாரணைக்கு ஆளுநரும், முதலமைச்சரும் உத்தரவிட வேண்டும் என்றார்.

You Might Also Like

85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு

பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி

விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்

பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி

அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்

TAGGED:AssistanceBank Accountspaymentஉதவித் தொகைமுறைகேடு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு இல்லை… மூனுக்கு போகிறார்: ஆதவ் அர்ஜூனாவின் பதிலடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?