புதுடில்லி: சிபிஎஸ்இ கிரேடிங் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன மாற்றம் தெரியுங்களா?
சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், 2024-25ல் கிரேடிங் முறையில் சிபிஎஸ்இ மாற்றம் கொண்டு வந்துள்ளது. வழக்கமாக, மதிப்பெண்களை வைத்து அளிக்கப்படும் கிரேடிங் முறைக்கு பதிலாக, சக மாணவர்களுடன் ஒப்பிட்டு கிரேடிங் அளிக்கவுள்ளது.
இதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம், மாணவர்களிடையே நிலவும் ஆரோக்கியமற்ற போட்டியை குறைக்கலாம் என சிபிஎஸ்இ கருதுகிறது. இது சாத்தியமானால் நிச்சயமாக மாணவர்கள் மத்தியில் இருக்கும் மன அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.