சென்னை: பட்ஜெட் உரையை வாசித்த பின்பு வேளாண் துறை அமைச்சர் பேசிய பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேளாண் துறை அமைச்சர் வினோத் சட்டப் பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். 11.38 மணிக்கு தனது உரையை முடித்தார். அவர் பட்ஜெட் உரையை பேசி முடித்த பிறகு பட்ஜெட் உரையில் இல்லாத சில வார்த்தைகளை அவர் கூறினார்.
குறிப்பாக விஜய் தான் உண்மையான முதல்வர் என்பது உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை கூறி முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசினார்.
வேளாண் அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பட்ஜெட் உரையில் இல்லாததை பேசுவது அவை மரபை மீறியதாகும் என்று குரல் எழுப்பினர். அடுத்து சபாநாயகர், பட்ஜெட் குறிப்பில் இல்லாததை தவிர வேறு செய்தி அமைச்சர் பேச்சில் இடம்பெற்றிருந்தால் அவை குறிப்பில் இருக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்பது குறித்து நான் ஆய்வு செய்து அறிவிப்பேன்’’ என்றார். இதையடுத்து சட்டப் பேரவை கூட்டம் இன்று காலை 11.40 மணிக்கு முடிவடைந்தது.
