திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி பெருவிழா தேரோட்டம்
மதுரை: தேரோட்டம்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. முருகன் தெய்வானையுடன் எழுந்தருளிய திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்; பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பி வழிபாடு செய்தனர்.