May 6, 2024

நிபந்தனையுடன் 7 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் நிபத்தனையுடன் நேற்று விடுதலை செய்தது. ராமேஸ்வரம் துறைமுகம் கடலோரப் பகுதியில் இருந்து கடந்த 20ம் தேதி மீன் பிடிக்க சென்ற 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். நேற்று 7 மீனவர்களையும் போலீசார் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி மீண்டும் 5 ஆண்டுகளுக்குள் கைதானால் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனைகளுடன் 7 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]