ஷிண்டேவுக்கு பாஜக அளித்த வாக்குறுதி
மராட்டியம்: ராஜ்தாக்ரேவின் தலைமையை ஏற்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தயங்கியதை அடுத்து மக்களவை தேர்தல் எவ்வாறு இருப்பினும் முதலமைச்சர் பதவி பறிக்கப்படாது என்று ஷிண்டேவுக்கு பாஜக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் சிவசேனாவின் வாக்கு வங்கிகள் சிதறடிக்க ராஜ்தாக்ரேவை பாஜக ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மராட்டிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.