ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள்
ஈரான்: ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப் அணியாத இளம்பெண் மாஷா அமினி போலீஸ் காவலில் பலியானதைத் தொடர்ந்து, அந்நாட்டு பெண்கள் ஹிஜாப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.