பொது சிவில் சட்டம் பேராபத்து … ப.சிதம்பரம் எச்சரிக்கை
பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நேற்று, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பேசிய அவர், “சட்டத்தை பயன்படுத்துவதில் மோடி பேராசிரியர். நாங்கள் கத்துக்குட்டி தான். இதே காரியத்தை காங்கிரஸ் செய்திருந்தால் மோடியும் சிறையில் இருந்திருப்பார். அதை நாங்கள் செய்யவில்லை” என்றார்.