பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் மோதல்: காவல்நிலையத்தில் புகார்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் மோதல் நடந்துள்ளது. பாஜகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளருக்கு பணியாற்றுவது தொடர்பான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தன்னை நெஞ்சில் கை வைத்து தள்ளியதாக மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிஹரன் மீது பெண் நிர்வாகி மஞ்சு பார்கவி (38) நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.