ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகர் கைது
சென்னை: அதிக வட்டி தருவதாக கூறி 84 ஆயிரம் பேரிடமிருந்து 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த விவகாரத்தில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முக்கிய தரகரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தரகராக செயல்பட்டு ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வசூலித்து, ஹரிகரன் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையை முடித்துவிட்டு, அவரை கைது செய்தனர்.