இலாகா இல்லாத அமைச்சர்… தமிழக அரசு அரசாணை
சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கக்கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு இவ்வாறு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் பொறுப்பாக பார்க்கின்றனர்.