திருப்பதில் மலைப்பாதையில் விபத்துக்களை தடுக்க நூதன முயற்சி
திருப்பதி: கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் பலர் காயமடைந்து ஊர் திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதனால் திருப்பதி மலை பாதையில் நடைபெறும் விபத்துகளை தடுக்க திருமலை போலீசார் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
விபத்துக்களை தடுக்க தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து வாகன ஓட்டிகளின் முகங்களில் தண்ணீர் தெளித்து மலைப்பாதையில் அனுப்பி வைக்கின்றனர்.