சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த கரடி குட்டிகள் மீட்பு
லாவோசில்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லாவோசில், வீடு ஒன்றில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 கரடி குட்டிகள் மீட்கப்பட்டன. சீன நாட்டை சேர்ந்த ஒருவரின் வீட்டில் கரடி குட்டிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து, வனவிலங்கு சரணாலயத்துக்கு தகவல் கொடுத்தனர். மீட்கப்பட்ட கரடி குட்டிகள், சரணாலயம் கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.