தெலுங்கானாவில் வளர்ச்சி திட்டங்கள் தாமதத்திற்கு மாநில அரசு காரணம்
ஹைதராபாத்: ஹைதரபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், பல வளர்ச்சித்திட்டங்கள் தெலங்கானாவில் தாமதமாக்கப்படுவது வேதனையளிக்கிறது. தெலங்கானாவில், மக்களுக்கு பலன் தரக்கூடிய மத்திய அரசின் பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற, மாநில அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.