அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தல்
சென்னை: அரிசி விலை உயர்வு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் போதிய நீர் இன்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால் அனைத்து வகையான அரிசிவிலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் 15 வரை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, தமிழக மக்களை பாதிப்பு க்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தனிக்கவனம் செலுத்த வேண்டும்.