May 21, 2024

“இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது; உடனடியாக விடுவிக்கவும்” – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவித்து, அவரை விடுவிக்க ஊழல் தடுப்பு முகமைக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இம்ரான் கானை ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் இரவு முழுவதும் ரகசிய இடத்தில் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின், போலீஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றத்தில், மூடிய அறையில், இம்ரான்கான் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். ஊழல் வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை தேவை என்பதால் அவரை 10 நாள் காவலில் வைக்க அனுமதி கோரியது என்ஏபி. அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், இம்ரான் கானை 8 நாட்கள் மட்டுமே விசாரிக்க அனுமதித்தது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்களால் பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”நீதிமன்ற பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்தில் யாரையும் கைது செய்ய முடியாது. பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு பிரிவு ஒரு மணி நேரத்திற்குள் இம்ரான் கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். விசாரணைக்கு ஆஜரான ஒருவரை எப்படி கைது செய்வது? இது நீதிமன்ற அவமதிப்பு. அதில், “இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது, அவரை விடுதலை செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!