இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ வழக்கு
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் அளித்தது தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தேசிய மல்யுத்த முகாமில் மல்யுத்த வீரர்களை பல பயிற்சியாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மல்யுத்த வீரர்கள் மற்றும் பெண் மல்யுத்த வீரர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொல்லை புகார் அளித்தார். மேலும், பாலியல் தொல்லையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் விளையாட்டு வீரர்களும், பெண்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில், மல்யுத்த வீரர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளின் போராட்டத்திற்கு கபில்தேவ், சானியா மிர்சா, நீரஜ் சோப்ரா ஆகியோரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, பெண் வீரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதற்கு பதிலளித்த டெல்லி போலீசார், உடனடியாக வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்தனர். அதன்படி, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.