சென்னை : உறுதியானது … சிம்புவின் அடுத்த படத்தில் காமெடியனாக நடிகர் சந்தானம் நடிப்பது உறுதியாக உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள் “தக் லைப்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
தொடர்ந்து, ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 49’ படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 50’ படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 51’ படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார். இவ்வாறு தொடர்ந்து பிசியாக உள்ளார் நடிகர் சிம்பு.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த கயாடு லோஹர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமீபகாலமாக இப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அது உறுதியாகி இருக்கிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சிம்புவும், சந்தானமும் ஏற்கனவே ‘வாலு, வானம், ஒஸ்தி, சிலம்பாட்டம்’ போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் சிம்புவின் மீது உள்ள நட்பின் காரணமாக இந்த படத்தில் காமெடியனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.